Thursday, October 4, 2007

அனுபவத்தின் வெளிப்பாடுகள்

  • உன்னுடைய எதிர்பார்ப்பு தோல்வியடையும்போது அதன் அல்லது அவர் மீது உன்னையறியாமலே வரும் வெறுப்பை தவிர்க்க முயற்சி செய்.
  • மற்றவரின் சின்னச்சின்னக் குறைபாடுகளை சுட்டிக்காட்டும்போது வரும் மனஸ்தாபங்களை பொருட்படுத்தாதே!!
  • உன்னுடைய சிறிய தவறுகளை மற்றொருவர் குறிப்பிடும்போது மனமுவந்து ஏற்றுக்கொள்.
  • நீ இன்னொருவரிடம் உரிமை எடுத்துக்கொள்ளுமுன் அவர் உனக்கு கொடுத்திருக்கும் வரைமுறையை மனதில் வைத்துக்கொள்.
  • உலகம் உன்னை கவனமாகக் கவனித்துக்கொண்டிருக்கிறது என்பதை ஒருபோதும் மறவாதே.
  • சிறப்பானவற்றை செய்யும்போது பாராட்டாத உலகம் தவறான ஒன்றுக்கு தண்டிக்கக் காத்திருக்கும்.
  • உன்னைச்சுற்றியுள்ளவர்கள் எப்போதும் உன் பரம எதிரிகளென்ற கவனம் வை ஆனால் நீ நண்பனாகவே இரு.
  • நல்லது செய்ய வேண்டாம் நல்லவற்றையே நினை.
  • நீ செய்வது நல்லதோ கெட்டதோ, பலமுறை யோசித்துச் செய்.
  • நீ எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் உன் எதிர்கால மாளிகையின் ஒர் செங்கல்.
  • மற்றவர் வேதனைப்படும்போது அவர்முன் நீ சந்தோசமாக இருக்காதே
  • காயங்களுக்கு மருந்து வேண்டாம் கனிவான பார்வைபோதும்
  • எப்போது மற்றவரின் துன்பத்தை உன்னுடையதாய் நினைக்க ஆரம்பிக்கிறாயோ அப்போதுதான் நீ மனிதனாகிறாய்.
  • ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு பத்து நிமிடமாவது அமைதியாய் இரு
  • கண்ணீரைத் துடைக்க வேண்டாம் கனிவான வார்த்தை போதும்
  • உன்னைச்சுற்றி எதிர்ப்பு வலுப்பெறுகிறதென்றால் நீ தலைவனாகத் தகுதியானவன்
  • எதையும் பாசத்தோடு பார் ஒவ்வொன்றும் உன்னிடம் பேசத்தொடங்கும்
  • நீ முதலில் உன்னை மதிக்கக் கற்றுக்கொள்
  • உன்னை முன்னால் நடக்கவிட்டு நீ பின்னாலிருந்து மதிப்பீடு செய்.
  • உன்னை ஒரு போதும் நீ தவறாக மதிப்பீடு செய்யாதே
  • குறைந்தபட்சம் உன்னைப்பார்ப்பவரிடம் சிரித்துவை, கடன் கேட்க மாட்டார்கள்.
  • கடன் கொடு கேட்காதே! வாங்கியதைக் கேட்காமல் கொடுத்துவிடு
  • மற்றவரின் மனைவியைத்தொடும்போதும் தூக்கத்தைக்கெடுக்கும்போதும் ஏற்படும் விளைவு ஒன்றுதான்
  • உலகத்தின் அமைதியை ரசிக்கக் கற்றுக்கொள் அது உன்னை ரசிக்கும்
  • நல்லவனாய் இருப்பதைவிட தேசபக்தனாய் இரு
  • உன் கண்முன் ஒரு தவறு நடந்தால் தயங்காமல் தட்டிக்கேள்
  • கஷ்டங்கள் பிரச்னைகள் மூலம்தான் கடவுள் உனக்கு வாய்ப்புக்களை வழங்குவார்
  • நேற்று நடந்ததை உன் கையிலும் இன்று நடப்பதை உன் கண்ணெதிரிலும் வைத்துக்கொண்டு நாளை நடப்பதை நீ நிர்ணயிக்க முடியும்.
  • எல்லாக் கடனிலும் பெரியது உன் காதுகளைக் கொடுப்பது
  • மருந்து போடவேண்டாம் குறைந்தபட்சம் மனதைப் புண்படுத்தாமலிரு.
  • உலகத்தில் ஒருவருக்குமே பிடிக்காதது மற்றவரின் புத்திமதி
  • தேவையற்ற அறிவுரை பகையை, வெறுப்பை வளர்க்கும்
  • உன் கடந்த காலங்களை கர்வத்தோடு பார் எதிர்காலம் எளிதாகத் தோன்றும்
  • உன் உணர்வுகளை மதிக்காதவனை எப்போதும் தூரத்தில் வை
  • வரிசையில் நிற்கும் போது வாய்ப்பு வந்தால் இடையில் புகாதே!
  • வரிசையில் நிற்கும்போது உன் பின்னால் நிற்பவரை ஒரு முறையாவது முன்னால் போக அனுமதி
  • தனிமையில் நல்லவனாயிரு பொதுவில் புகழப்படுவாய்
  • ஆசைகளையும் தேவைகளையும் சுருக்கிக்கொள்ளாதே! வருமானத்தைப் பெருக்கிக்கொள்
  • கூடுமானவரை ரத்த சம்பந்தமுள்ளவளை மணந்துகொள்
  • தோல்வியடையும்போது தோல்வியை மறந்துவிடு தோல்வியினால் பெறும் பாடத்தை மறந்துவிடாதே
  • மனைவியின் தகாத உறவும் மரணப்படுக்கையும் ஒன்றுதான்